சாய்பாபா ஆசிரமத்தில் ஜெர்மன் பெண் கற்பழிப்பு
புட்டபர்த்தி:
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய்பாபா ஆசிரமத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண் கற்பழிக்கப்பட்டார்,
பாபாவை தரிசிக்க கடந்த 20 நாட்களுக்கு முன் புட்டபர்த்தி வந்தார் ஜெர்மனியைச் சேர்ந்த அந்தப் பெண். ஆசிரமத்தில் உள்ளஅடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்தார். ஆசிரமத்தில் தினமும் மணிக்கணக்கில் தியானம் செய்து கொண்டும் பாபாவைதரிசித்துக் கொண்டும் இருந்தார்.அந் நிலையில் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளியும், இரு ஆட்டோ டிரைவர்களும் சேர்ந்து அந்தப் பெண்ணைஅவரது அறையில் வைத்து மாறி, மாறி கற்பழித்துள்ளனர். முன்னதாக அந்தப் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மயக்க ஊசிபோட்டுவிட்டு அவரை கற்பழித்தனர்.
அடுத்தடுத்து கற்பழிக்கப்பட்ட அந்தப் பெண் மூர்ச்சையானார். இதனால் அவர் இறந்துவிட்டதாகக் கருதிய அக் கும்பல்தப்பியோடியது.
நீண்ட நேரத்துக்குப் பின் ஒருவாராக மயக்கம் தெளிந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் அனந்தபுரம்டிஐஜி ஜெயராம ரெட்டியிடமும் புகார் கொடுத்தார்.
தலைமறைவாகிவிட்ட காவலாளி மற்றும் ஆட்டோ டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உடல் முழுக்க கீறல்கள், காயங்களுடன் உள்ள அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்குமுன்பும் ஆசிரமத்தின் குடியில் தங்கியிருந்த ஒரு வெளநாட்டுப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவரதுபொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications