ஜனாதிபதி மாளிகை பாதுகாவலர் மர்மச் சாவு
டெல்லி:
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் மத்தியப் படையைச் சேர்ந்த ஒரு காவலர் குண்டுக் காயங்களுடன் மர்மமான முறையில்இறந்து கிடந்தார். அவரது உடல் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்கு கொண்டிருக்கலாம் என்றுகருதப்படுகிறது.
கிருஷ்ண குமார் (வயது 29) என்ற அந்த மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையின் காவலர் ஜனாதிபதி மாளிகைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.அதிகாலை 3 மணியளவில் அவர் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர்உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த குமார், சிஐஎஸ்எப் படையின் 81வது பட்டாலின் பிரிவைச் சேர்ந்தவர். விடுப்பில் சென்றிருந்தஅவர் நேற்று தான் பணிக்குத் திரும்பினார்.
இச் சம்பவம் குறித்து அறிந்ததும் டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அல்லது தவறுதலாக அவர் சுட்டிருக்கலாம்என்றும் தெரிகிறது.
சமீபத்தில் தான் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் வீட்டில் காவலுக்கு இருந்த சிஆர்பிஎப் படையின் தலைமைக் காவலரைஅவரது ஜூனியர் சுட்டுக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.