பெரியாறு அணை விவகாரம்: கம்பம், குமுளியில் போலீஸ் குவிப்பு
தேனி:
பெரியாறு அணையின் உயரத்தை 152 அடியாக அதிகரிக்கக் கோரி தனித்தனியாக நடைபயணம்மேற்கொண்டுள்ள பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் ஆகிய இருவரும் இன்று தங்களது பயணத்தை முடிக்கவுள்ளனர்.
இதையொட்டி தமிழக, கேரள எல்லைப் பகுதியான கம்பம், குமுளியில் பலதத் போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கக் கோரி மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் தனது ஆதரவாளர்களுடன் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தனது பயணத்தை இன்றுசின்னமனூரில் முடிக்கிறார்.
அதேபோல பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் தனது நடைபயணத்தை இன்று கும்பத்தில் நிறைவு செய்கிறார்.இதைத் தொடர்ந்து பாஜக தொண்டர்களுடன் குமுளியில் ஆர்ப்பாட்டத்திலும் ராதாகிருஷ்ணன் ஈடுபடுகிறார்.மேலும் பொதுக் கூட்டமும் நடத்தப்படவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பாஜக தொண்டர்கள் குமுளியை நோக்கிவந்தவண்ணம் உள்ளனர்.
கேரளத்துக்கு எதிராக எல்லைப் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடப்பதால், தமிழக-கேரள பகுதியினரிடையேமோதல் ஏதும் நடந்துவிடாமல் தடுக்கும் பொருட்டு அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குமுளியிலும், கம்பத்திலும் ஆயுதம் தாங்கிய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். திண்டுக்கல் சரக டிஐஜி ரவிதேனியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.