திமுக சார்பு டிரைவர், கண்டக்டர்கள் பெரும் ரகளை: பாதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்
சென்னை:
போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பு வெளியானவுடன், அதிமுக சார்புதொழிற்சங்க ஊழியர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
ஆனால், ஊதிய உயர்வு போதவில்லை என்று கூறி திமுக சார்பு தொழிற்சங்க ஊழியர்கள் ஆங்காங்கேவன்முறைப் போராட்டத்தில் இறங்கினர்.பல இடங்களில் பஸ்களை பாதியிலேயே நிறுத்திய திமுக சார்பு டிரைவர்களும் கண்டக்டர்களும் பயணிகளைபாதியிலேயே இறங்கிச் செல்லுமாறு கூறினர். இதனால் பல இடங்களில் பயணிகளுக்கும் டிரைவர்,கண்டக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்த சென்னை பல்லவன் இல்ல தலைமை அலுவலக வளாகத்தில்அதிமுக சங்கத்தின் ஊழியர்கள் கொண்டாடட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு குவிந்த திமுக, கம்யூனிஸ்ட் கட்சி சார்பான தொழிற்சங்க ஊழியர்கள்நூற்றுக்கணக்கில்லஅங்கு திரண்டு அரசுக்கு எதிராகவும், ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
இதைத் தொடர்ந்து அதிமுக, திமுக போக்குவரத்து ஊழியர்களிடையே கடும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
திமுக சார்பு தொழிலாளர்கள் சாலையிலும் வந்து கலாட்டாவில் ஈடுபட்டனர். பல பேருந்துகளின் கண்ணாடிகள்உடைக்கப்பட்டன. இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது. 13 ஊழியர்களை போலீஸார்அங்கிருந்து அகற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்தத் தகவல் அறிந்ததும் திமுக தொழிற்சங்க ஊழியர்கள் ஆங்காங்கே பெரும் வன்முறையில் இறங்கினர். இதில்10க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
நாடகம்: வாசன் கருத்து
இதற்கிடையே போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வு ஒரு கண் துடைப்பு நாடகம் என்று தமிழக காங்கிரஸ்தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த நான்கு வருடமாக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தாமல்தற்போது திடீரென ஊதிய உயர்வு என்று ஒன்றை அறிவித்திருப்பது கண் துடைப்பாகவும், நாடகமாகவும் தெரிகிறது.
அதிமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கையே இது மீண்டும் பிரதிபலித்திருக்கின்றது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதமே உள்ள நிலையில் பல்வேறு சலுகைகளை இந்த அரசு அறிவித்து வருகிறது. இதை நம்பி மக்கள் ஏமாறமாட்டார்கள் என்பதை அதிமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications