ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை- அரசு எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஸ்டிரைக்கில் கலந்து கொண்டுள்ள போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மெய்யப்பன் கூறியதாவது:சென்னையில் ஒரு சில தொழிற்சங்க ஊழியர்கள் தான் பணிக்கு வரவில்லை.
வேலைக்கு வராத ஊழியர்களுக்குப் பதிலாக தாற்காலிகப் பணியாளர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நகரில் 85 சதவீத பஸ்கள் வழக்கம்போல் ஓடுகின்றன. ஸ்டிரைக்கில் கலந்து கொண்டுள்ள ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டுநோட்டீஸ் அனுப்பப்படும். அவர்கள் மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதே போல பஸ்கள் மீது கல் வீசித் தாக்கிய பிற ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த ஊழியர்களை போலீசார் கைதுசெய்துள்ளனர். அவர்கள் மீது ஊதிய உயர்வு ரத்து, சஸ்பெண்ட், டிஸ்மிஸ் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications