கருணாநிதி தலைமையில் பிரமாண்டமான மகளிர் பேரணி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் செப்டம்பர் 15ம் தேதி திமுக சார்பில் நடைபெறவுள்ள பிரமாண்டமான மகளிர் பேரணிக்கு,அக்கட்சியின் தலைவர் கருணாநிதியே தலைமையேற்கவுள்ளார்.
நாடாளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்திசெப்டம்பர் 15ம் தேதி சென்னையில் மகளிர் பேரணியை நடத்த திமுக முடிவு செய்துள்ளது. இதில்ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கவுள்ளனர்.இப்பேரணிக்கு தானே தலைமை ஏற்று நடத்தவிருப்பதாக தற்போது கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி, தலைமைக் கழகமே இந்தப்போராட்டத்தை நடத்தவுள்ளது. நானே பேரணிக்குத் தலைமை ஏற்கவுள்ளேன்.
எனவே, கழக மகளிர் அணியினர் பெருமளவில் பேரணியில் கலந்து கொண்டு நமது கருத்தை உரியதரப்பினருக்கு உரத்த குரலில் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications