For Quick Alerts
For Daily Alerts
Just In
வாஜ்பாய் கருத்து: வைகோ ஆச்சரியம்
சென்னை:
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழப் போவதாக மாஜி பிரதமர் வாஜ்பாய் சொல்வது ஆச்சரியம் அளிப்பதாக மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நல்ல ஒற்றுமைஉள்ளது.
பாஜகவை ஆட்சியில் இருந்து தூரத்தில் வைக்க, காங்கிரஸ் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தருவோம் என இடதுசாரிகள் தெள்ளத்தெளிவாகக் கூறிவிட்டனர்.
இந் நிலையில் விரைவில் ஆட்சி கவிழும், இடைத் தேர்தல் வரும் என்றெல்லாம் வாஜ்பாய் பேசுவது ஆச்சரியமாக உள்ளது.எதை வைத்து அவர் இவ்வாறு பேசுகிறார் என்று புரியவில்லை என்றார்.
Comments
Story first published: Wednesday, August 31, 2005, 5:30 [IST]