இராக்: நெரிசலில் இறந்தோர் எண்ணிக்கை 1,000த்தை தாண்டியது

Subscribe to Oneindia Tamil

பாக்தாக்:

இராக்கில் பாக்தாத் நகரில் ஷியா வழிபாட்டுத் தலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை1,000த்தைத் தாண்டிவிட்டது. இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

இந்த துயர சம்பவத்துக்கு இந்தியா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

ஷியா புனிதத் தலத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களிடையே துப்பாக்கிச் சூடு நடத்தி, அவர்களை கலைந்து ஓடச் செய்துஇந்தக் களேபரத்தை தீவிரவாதிகள் நடத்தினர்.

சதாமின் ஆதரவாளரும் அல்-கொய்தா முக்கிய தலைகளில் ஒருவருமான அபு முஸாப் அல்-சர்காவியின் தலைமையிலானதீவிரவாதிகள் தான் இதற்குக் காரணம் என இராக் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து லட்சக்கணக்கானவர்கள் கலைந்து ஓடியபோது மிதிபட்டும், நெரிசலில் சிக்கியும், பாலத்தைக்மொத்தமாகக் கடந்தபோது அது உடைந்து விழந்ததிலும் 1,000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 500க்கும்மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

2003ம் ஆண்டு மார்ச்சில் இராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த பிறகு நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்கள்,அசம்பாவிதங்களிலேயே மிக மோசமான சம்பவம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+