கிளிநொச்சியில் அமைதி பேச்சு: இலங்கை அரசு நிராகரிப்பு
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தைகளை கிளிநொச்சியில் நடத்தலாம் என்ற புலிகளின் யோசனையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
கதிர்காமரின் கொலையைத் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை வலுவாக்க புலிகளுடன் மீண்டும் தொடங்க முன் வந்தார்அதிபர் சந்திரிகா குமாரதுங்கா. இதற்கு புலிகளும் ஒப்புதல் தந்தனர்.இதையடுத்து பேச்சுவார்த்தையை எங்கு நடத்துவது என்ற சிக்கல் எழுந்துள்ளது.
தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு இலங்கையின் கிளிநொச்சியில் இந்தப் பேச்சுவார்த்தைகளை வைத்துக் கொள்ளலாம்என புலிகள் தெரிவித்த யோசனையை அரசு நிராகரித்துவிட்டது.
அதே போல ஓமந்தைப் பகுதியில் வைத்துப் பேச்சு நடத்தலாம் என்ற அரசின் யோசனையை புலிகள் நிராகரித்துவிட்டனர்.
இத்தகவலை அரசின் செய்தித் தொடர்பாளர் நமில் சிரிபால டிசில்வா தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிற பகுதிகளில் வைத்துக் கொள்ள புலிகள் மறுத்துவிட்டனர்என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ளலாம் என புலிகள் சொன்ன யோசனையைஇலங்கை ஏற்க மறுத்தது. இதையடுத்து கிளிநொச்சியில் வைத்துப் பேசலாம் என புலிகள் தெரிவித்திருந்தனர்.