ப.சி. மீது ஜெயாவுக்கு ஆத்திரம்: வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பதவி விலக வேண்டிய அளவுக்கு ப.சிதம்பரம் எந்தத் தவறும் செய்யவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

திமுக தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டமன்றத் தேர்தலிலும் வெல்லும்.

13 லட்சம் போலி வாக்காளர்களைச் சேர்த்து ஜனநாயகத்தை காவு கொடுக்கும் வேலையை செய்த அதிமுகவினர் மீது கிரிமினல்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ப.சிதம்பரம் பதவி விலக வேண்டிய அளவுக்கு அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. இந்த விஷயத்தில் ஜெயலலிதாசொல்வதை எல்லாம் ஏற்க முடியாது.

மகளிர் சுய உதவிக் குழுக்களை தேர்தல் லாபத்துக்கு ஜெயலலிதா பயன்படுத்துவதை ப.சிதம்பரம் சுட்டிக் காட்டியதாலும்,அந்தக் குழுக்களுக்கு நிதி தருவது மத்திய அரசு தான் என்பதை அவர் விளக்கியதாலும் எரிச்சலடைந்த ஜெயலலிதா, தனதுஆத்திரத்தை இப்படி கொட்டத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வரும் என்று வாஜ்பாய் கூறுவது, பாஜகவில் நடந்து வரும் பெரும் குழப்பத்தைத்தீர்க்கத் தான். இந்த ஆட்சிக்கு எந்த மிரட்டலும் இல்லை. 5 ஆண்டுகளை அது நிச்சயம் பூர்த்தி செய்யும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+