ஐரோப்பிய நாடுகள் மீது விரைவில் புதிய தாக்குதல்: அல்-கொய்தா மிரட்டல்
துபாய்:
லண்டனில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளைப் போல அமெரிக்காவை ஆதரித்து வரும் ஐரோப்பிய நாடுகள் மீதும்விரைவில் புதிய தாக்குதல்கள் நடத்துவோம் என அல்-கொய்தா எச்சரித்துள்ளது.
பின் லேடனின் வலது கரமான அய்மான் அல்-ஜவாகிரி நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் புதிய வீடியோ ஒன்றைவெளியிட்டுள்ளார். அல்-ஜசீரா டிவிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த வீடியோ நேற்று ஒளிபரப்பானது.அதில்,
பாலஸ்தீனம், இராக், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் பங்கேற்றுள்ள நாடுகள் தான் எங்களது இலக்கு. லண்டனில் பஸ்,ரயில்களில் குண்டு வெடிப்புகளை நாங்கள் தான் நடத்தினோம். அது நாங்கள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரின் முகத்தில்கொடுத்த அறை.
(அப்போது லண்டனில் தற்கொலைத் தாக்குதலில் பலியான முகம்மத் சித்திக் கான் என்ற அல்-கொய்தா தீவிரவாதி பேசும்காட்சியும் இடையில் சேர்க்கப்பட்டுள்ளது. தனது தாக்குதலுக்கான காரணம் குறித்து சித்திக் விளக்குகிறார்).
அமெரிக்காவோடு சேர்ந்து கொண்டு எங்கள் நாடுகளில் ரத்த ஆறை ஓடச் செய்த ஐரோப்பிய நாடுகளில் நாங்கள்எரிமலைகளாக வெடிப்போம். எங்களது எச்சரிக்கைகளை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது.
அமெரிக்காவுடனான கூட்டுப் போரில் இருந்து விலகினால் ஐரோப்பாவைத் தாக்க மாட்டோம் என அறிவித்தோம். அதையும்மதிக்கவில்லை.
இதனால் நீங்கள் எங்களுக்குத் தந்த சாவுகளை உங்களுக்குத் திருப்பித் தருவது என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்.
இவ்வாறு ஜவாகிரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications