For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயேந்திரர் அர்ச்சகரோ சாஸ்திரியோ அல்ல: தமிழக அரசு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் கருவறைக்குள் சென்று பூஜை செய்ய காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்குஉரிமையோ, சிறப்புச் சலுகையோ ஏதும் கிடையாது என்று தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை திட்டவட்டமாகஅளித்துள்ளது.

இந்தக் கோவிலில் சங்கரச்சாரியாருக்கு பெரும் சலுகைகள் தரப்பட்டு வந்தன. ஜெயேந்திரர் வந்தால் அவரே கருவறையில் சென்றுபூஜை செய்வது மரபாக இருந்து வந்தது.

இந் நிலையில் கடந்த ஜூலை மாதம் ராமேஸ்வரம் சென்றிருந்த ஜெயேந்திரர், ராமநாத சுவாமி ஆலய கருவறைக்குள் சென்றுபூஜை நடத்த முயற்சித்தார். இருமுறை முயற்சித்தும் அவரை கருவறைக்குள் நுழைய கோவில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள்மறுத்து விட்டனர்.

இதனால் அதிருப்தியுற்ற ஜெயேந்திரர் ராமேஸ்வரத்தை விட்டு சென்று விட்டார். பின்னர் கருவறைக்குள் சென்று பூஜை செய்யதனக்கு உரிமை உண்டு என்று கூறி இந்து அறநிலையத்துறைக்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார் ஜெயேந்திரர்.

இதற்கு இத்தனை மாதங்கள் கழித்து இப்போது தான் இந்து அறநிலையத்துறை ஆற, அமர பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்யவும், தீபாராதனை காட்டவும் தனக்கு உரிமை உண்டு என்றுஜெயேந்திரர் கூறுவது தவறு.

பூஜை செய்யவும், தீபாராதனை காட்டவும் கோவில் அர்ச்சகர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. ஜெயேந்திரருக்கு அந்தஉரிமையும் கிடையாது, சிறப்புச் சலுகையும் கிடையாது. மரபுப்படியோ, வழக்கப்படியோ அவருக்கு அந்த சிறப்புச் சலுகைவழங்கப்படவில்லை.

காஞ்சி சங்கராச்சாரியார் அர்ச்சகரோ அல்லது சாஸ்திரியோ இல்லை. எனவே கருவறைக்குள் அவரை அனுமதிக்க முடியாது என்றுகூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X