பிளஸ்1, பிளஸ் 2வில் இனி எலி ஆபரேஷன் இல்லை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ செய்முறைத் தேர்வுகளில், எலிகளை அறுவை செய்யும் பாடத் திட்டத்தை தமிழக அரசு ரத்துசெய்துள்ளது.
மேல் நிலைக் கல்வியில் விலங்கியல் பிரிவு மாணவர்களுக்கு எலி, தவளை போன்றவற்றை அறுவை (டிசக்ஸன்) செய்து அதன்உறுப்புகளை அறியும் செய்முறை பாடம் இருந்து வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 75,000 எலிகளைமாணவர்கள் கொலை செய்து வந்தனர்.இதையடுத்து இந்த செய்முறைத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துவந்தனர். யானைகளுக்கு முதுமலை ஏரியாவில் வைத்து வருடந்தோறும் சிறப்பு சிகிச்சை அளிக்கும் தமிழக அரசு இந்தக்கோரிக்கையையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதனால் இந்த ஆண்டு முதல் இந்த அறுவை சிகிச்சை பாடத் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இனிமேல் எலி, தவளை அறுவை, செய்முறைப் பாடத் திட்டத்தில் இருக்காது என தமிழக அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications