பெட்ரோல், டீசல், கேஸ் விலை அடுத்த வாரம் உயர்கிறது
டெல்லி:
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலைகள் அடுத்த வாரம் உயர்த்தப்படுகின்றன.
இது தொடர்பான முடிவு இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்ட நிலையில், இந்தியாவில் பெட்ரோலியப்பொருட்களின் விலையை உயர்த்த காங்கிரஸ் கூட்டணி அரசின் முக்கிய கட்சியான இடதுசாரிகள் அனுமதிக்கவில்லை.
இந் நிலையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் உயர்ந்து கொண்டே உள்ளது. இதையடுத்து பெட்ரோல், டீசல், சமையல் கேஸின்விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இகு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பெட்ரோல், டீசலின் விலையைலிட்டருக்கு ரூ. 2 முதல் 3 வரை உயர்த்தவும், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டெருக்கு ரூ. 20 உயர்த்தவும் முடிவுசெய்யப்பட்டது.
நார்வே, ஐஸ்லாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணத்தில் இருக்கும் பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கரஅய்யர் அடுத்த வாரம் நாடு திரும்பியதும் விலை உயர்வு குறித்த அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.