சங்கரராமன் வழக்கு: திங்கள்கிழமை குற்றச்சாட்டு பதிவு
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது திங்கள்கிழமை குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்படும் எனத் தெரிகிறது.
சங்கரராமன் கொலை வழக்கு தற்போது செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கில்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுப் பதிய வேண்டியுள்ளது.ஆனால் சதுர்மாஸ்ய விரதம் இருப்பதாக கூறி ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் நீதிமன்றத்திற்கு வராமல் உள்ளனர். அவர்களுக்குநேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று நீதிபதி அக்பர் அலி மறுத்து விட்டார்.
திங்கள்கிழமை குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவர்உத்தரவிட்டுள்ளார். ஆனால் வருகிற திங்கள்கிழமை ஜெயேந்திரர், விஜயேந்திரர் நீதிமன்றத்திற்கு வருவார்களா என்பதுஉறுதியாகத் தெரியவில்லை.
ஒருவேளை அவர்கள் நீதிமன்றத்திற்கு வந்தால் அன்றைய தினமே குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications