அரசியலில் நுழைய மாட்டேன்: முத்துலட்சுமி

Subscribe to Oneindia Tamil

சத்தியமங்கலம்:

அரசியலில் நுழையும் எண்ணம் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி.

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு சற்றே அமைதியாக இருந்து வந்த முத்துலட்சுமி, சமீப காலமாக அதிரடிப்படையினரால்பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களின் நலனுக்காக புதிய இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாக கூறி வருகிறார் முத்துலட்சுமி.

இதன் முதல் கட்டமாக மலைவாசிகள் வசிக்கும் பகுதிகளில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். அதன் ஒரு கட்டமாகசத்தியமங்கலம் வந்த முத்துலட்சுமி அங்கு தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லாவை சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மலை வாழ் மக்களின் நலனுக்காக நான் ஏற்படுத்தியுள்ள அமைப்புக்குநிதியுதவி செய்யுமாறு ஜவாஹிருல்லாவைக் கேட்டுக் கொண்டேன். மேலும் வீரப்பனின் தம்பி அர்ஜூனின் மகனுக்கு கல்விக்கானநிதியுதவியை வழங்கவும் அவரிடம் கோரிக்கை விடுத்தேன்.

அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்கள் பலர் என்னிடம் வந்து தாங்கள் பட்டு வரும் சிரமங்களை,கொடுமைகளைக் கூறி இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கக் கோரினர். அதனால்தான் புதிய இயக்கத்தை தொடங்கவுள்ளேன். நான்அரசியலில் நுழைவதற்காக இதை ஆரம்பிக்கவில்லை.

முன்பு அதிரடிப்படையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான மலை வாழ் மக்கள் தற்போது வனத்துறையினரால் பல்வேறுபிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

எனது கணவர் சாவில் உள்ள மர்மங்களுக்கு இன்னும் அரசுத் தரப்பில் முறையான விளக்கம் கிடைக்கவில்லை. இதுதொடர்பானஆர்.டி.ஓ. விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திற்கு அரசு அனுப்பாமல் உள்ளது என்றார் முத்துலட்சுமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+