விருதாச்சலம்: 11 தமிழ் தீவிரவாதிகள் கைது!
விருத்தாச்சலம்:
தமிழர் விடுதலைப் படை நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த 11 தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். வங்கியைக்கொள்ளையடிக்க அவர்கள் திட்டம் தீட்டியிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தமிழர் விடுதலைப் படை அமைப்பின் தலைவர் செந்தில்குமார் கடந்த மாதம் கடலூர் அருகே போலீஸாரால் சுற்றி வளைத்துக்கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளை போலீஸார் தீவிரமாக வேட்டையாடிவருகின்றனர்.இந்த நிலையில், விருத்சாச்சலம் ஆற்றங்கறை பகுதியில் உள்ள ஒரு கோவிலின் முன்பு தமிழர் விடுதலைப் படை இயக்கத்தைச்சேர்ந்த சிலர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி. பழனிவேலுதலைமையில் போலீஸ் படை அங்கு விரைந்தது.
அங்கு ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்த பரந்தாமணி, துளசிமணி, சேகர், பாஸ்கர், வேலு, தூள் மணி, அல்லா பக்ஷ்,பாலமுருகன், அசோக் குமார், முத்து, சம்பத், அந்தோணி ஆகிய 11 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்துஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல பரபரப்புத் தகவல்கள் கிடைத்தன. பிரிந்து கிடக்கும் தமிழ் நக்சலைட் அமைப்புகளைஒருங்கிணைக்க இவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர். மேலும், தங்களுக்குத் தேவைப்படும் பணத்திற்காக வங்கிக் கொள்ளையில்ஈடுபடவும் இவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர். இதுதொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோதுதான் போலீஸாரிடம்சிக்கினர்.