தலித் இளைஞர்கள் படுகொலை: ஜெ.வுக்கு திருமா கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடலூர் மாவட்டத்தில் 3 தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டவர், சென்னை உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தில் 3 தலித் இளைஞர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். இந்த வழக்கில் கார்த்திக் என்பவர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கார்த்திக்கிற்கு கடலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் கார்த்திக் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சேரி மக்களுக்கு இதன் மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தலையிட்டு, இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்துஉச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். இதற்கு முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+