குப்பையில் குண்டுவெடிப்பு; கிருஷ்ணகிரியில் பதட்டம்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே குப்பைத் தொட்டியில் குண்டு வெடித்ததில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இதனால்நக்சலைட்டுகள் நடமாட்டம் கிருஷ்ணகிரியில் இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
கிருஷ்ணகிரியை அடுத்த குப்பச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த காசி, மாதசி ஆகிய சிறுவர்கள் குப்பத்ை தொட்டிகளில் கிடக்கும்பிளாஸ்டிக்குகள், காகிதங்களை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.இவர்கள் இருவரும் தங்களது தந்தை முனியப்பனுடன் சேர்ந்து ராகிமனப்பள்ளி என்ற பகுதியில் குப்பைகளில் பிளாஸ்டிக்பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெரிய சாக்குப் பையில் சில பொருட்கள் இருந்தன. அதைப் பார்த்தமாரி அவற்றை கையில் எடுத்துள்ளான்.
அப்போது அது திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதில் இரு சிறுவர்களும், முனியப்பனும் படுகாயமடைந்தனர்.சிறுவர்கள் இருவரும் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். மூன்று பேரையும் அப்பகுதி மக்கள் மருத்துவமனையில்சேர்த்தனர்.
வெடிகுண்டு எப்படி குப்பைத் தொட்டியில் வந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். நக்சலைட்டுகள்இந்த குண்டை குப்பைத் தொட்டியில் போட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸார்தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.