பிரதமரை அவமதித்து விட்டார் ஜெ.: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரதமர் கலந்து கொண்ட விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததன் மூலம் பிரதமரை முதல்வர் ஜெயலலிதா அவமதித்துவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மூத்த தலைவர்களைப் புறக்கணிப்பது, அவமதிப்பது, அநாகரீகமாக நடந்து கொள்வது,எதிர்க்கட்சித் தலைவர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பது, அமைச்சர்கள், அதிகாரிகளை மதிக்காத தன்மை,கலாச்சாரத்தை அசிங்கமாக நினைப்பது போன்றவை ஜெயலலிதாவின் இயல்புகள்.

பிரதமர் கலந்து கொண்ட விழாவுக்கு அவர் வந்திருந்தால்தான் ஆச்சரியமாக இருந்திருக்கும். எதிர்பார்த்தது போலவேபுறக்கணித்து பிரதமரை அவமதித்துள்ளார். இத்தகைய போக்கை அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது மாநில நலனுக்குஉகந்ததல்ல.

சமீபத்தில் டெல்லியில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலில் ஜெயலலிதா பேசுகையில், விவசாயத்திற்கு தனது அரசுமுக்கியத்துவம் தருவதாக கூறியிருந்தார். ஆனால் தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், பசி, பட்டினியால் 50க்கும் மேற்பட்டவிவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

அரசு கொடவுன்களில் போதிய உணவு தானியக் கையிருப்பு இல்லை. இதுகுறித்து புள்ளிவிவரத்துடன் நாம் எடுத்துக் கூறினாலும்அதற்கு ஜெயலலிதா பதிலளிப்பதில்லை.

கடந்த 18 மாதங்களில் விவசாயத் துறையில் 18 கூடுதல் இயக்குநர் பணியிடம் காலியாகவே வைக்கப்பட்டுள்ளது. மொத்தம்உள்ள 134 உதவி இயக்குநர் பணியிடங்களில் 15 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. இதுதான் தமிழக அரசுவிவசாயத்துறை மீது காட்டும் அக்கறையின் லட்சணம்.

காவல்துறையும் இந்த அரசின் அலட்சியப் போக்கிலிருந்து தப்பவில்லை. காவல்துறைக் கண்காணிப்பாளராக பதவி உயர்வுபெறுவதற்குத் தகுதி வாய்ந்த 21 கூடுதல் கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு தராமல் வைத்துள்ளது இந்த அரசு. 9பணியிடங்கள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. சில மூத்த காவல்துறை அதிகாரிகளே எனக்குத் தந்த தகவல் இது என்றுகூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+