சேது: எரிச்சலைக் கொட்டும் ஜெ. - கருணாநிதி
சென்னை:
தமிழக மக்களின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் சேது சமுத்திரத் திட்டம் குறித்து தனது எரிச்சலைக் கொட்டி வருகிறார்ஜெயலலிதா என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியும், டி.ஆர்.பாலுவும் தங்களுக்கு மட்டுமே தெரிந்த சில காரணங்களால் சேது சமுத்திரத் திட்டத்தைஅவசரகதியில் தொடங்கியுள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.ஜெயலலிதாவின் புகாருக்கு கருணாநிதி அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளார். அதில், சேது சமுத்திரத் திட்டப் பணிகளால் மீன்கள்கிடைக்கவில்லை, மீன் வலைகள் அறுந்து போய் விட்டன, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டதாக ஜெயலிதாகூறியுள்ளார்.
தேசிய சுற்றுச்சூழல் ஆய்வுக் கழகம், நீரி கொடுத்த விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் இத்திட்டம்தொடங்கப்பட்டது. இந்தத் துறை தொடர்பான நிபுணரான டாக்டர் கண்ணையன் தலைமையில் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்களின் நலன், வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாதக வகையில் பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக பொருளாதார வளர்ச்சி, மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல்தனது எரிச்சலைக் கொட்டி பேசுகிறார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications