6 மாதத்தில் எங்க ஆட்சி: ப.சி பகீர்!
புதுக்கோட்டை:
தமிழகத்தில் இன்னும் ஆறே மாதங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்தடாலடியாக கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், தமிழகத்திற்கு மத்திய அரசு தனதுகடமைகளை பூரணமாக ஆற்றி வருகிறது. காங்கிரஸ் ஆட்சி இல்லையே என்ற ஒரே குறைதான் இங்கு உள்ளது. ஆனால் இன்னும்6 மாதத்தில் தேர்தல் வரும், காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்து அரசமைக்கும்.மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கொண்டு வந்தது மத்திய அரசுதான். ஆனால் இப்போது அத்திட்டத்திற்கு யார் யாரோ உரிமைகொண்டாடி வருகிறார்கள். தங்களுக்கு சாதகமாக மகளிர் சுய உதவிக் குழுக்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் நான்கு கோடி விவசாயிகள் கடனாளிகளாகவும், 6 கோடி விவசாயிகள் கூலித் தொழிலாளர்களாகவும் உள்ளனர்.இந்த நிலையை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழக அரசு தேர்தல் நெருங்கி வருவதையடுத்து பலர் மீது பரிவு காட்டத் தொடங்கியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்மீது திடீரென காதல் மலர்ந்துள்ளது. இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். ஒரே நாளில் 1 லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்குஅனுப்பி கின்னஸ் சாதனை படைத்தது இந்த அரசுதான் என்பதை அந்த அரசு உள்பட யாரும் மறக்கவில்லை, மறக்கவும்மாட்டார்கள் என்றார் ப.சிதம்பரம்.
அடுத்த தேர்தலில் தாங்கள்தான் ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று திமுகவினர் நினைத்துக் கொண்டுள்ள நிலையில்காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கும் என்று ப.சிதம்பரம் பேசியிருப்பது, திமுக, காங்கிரஸ் இடையே மீண்டும் ஒரு சர்ச்சையைக்கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications