சென்னை, குமரியில் மீண்டும் கடல் கொந்தளிப்பு
சென்னை:
சென்னை அருகே எண்ணூர் பகுதியில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள், பொதுமக்களிடையே பீதிஏற்பட்டுள்ளது.
சுனாமி தாக்குதலுக்குப் பிறகு தமிழக கடலோரப் பகுதிகளில் அடிக்கடி கடல் கொந்தளிப்பு, உள்வாங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள்நடந்து வருகின்றன.இந்த நிலையில் சமீபத்தில் சென்னை அருகே எண்ணூர் பகுதியிலும், மெரீனா கடற்கரைப் பகுதியிலும் கடல் கொந்தளிப்பும்,உள்வாங்கும் நிகழ்ச்சியும் நடந்தன. இதனால் எண்ணூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எண்ணூரில் கடலோரத்தில் உள்ள சில பகுதிகளில் தெருக்களுக்களில் கடல் நீர் புகுந்ததால் பீதி அதிகமாகரியது. இருப்பினும்இதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது, சுனாமி வராது என்று நிபுணர்கள் தெளிவுபடுத்தினர்.
இந்த நிலையில் அமாவாசை தினமான சனிக்கிழமையும், இன்றும் எண்ணூர் பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகமாககாணப்பட்டது. இருப்பினும் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அன்னை சிவகாமி நகர் பகுதியில் கடல் நீர் 100 மீட்டர் தூரத்துக்கு உட்புகுந்தது. கடல் நீரைத் தடுக்கும் சுவரைத் தாண்டி கடல் நீர்வந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
கன்னியாகுமரி, நாகை உள்ளிட்ட சில இடங்களிலும் இதுபோல கடல் கொந்தளிப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications