விஜயகாந்த் மாநாட்டு நுழைவாயில்களுக்கு எம்.ஜி.ஆர் பெயர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் விஜயகாந்த் நடத்தப் போகும் அரசியல் மாநாட்டின் நுழைவாயில்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆரின் பெயர்கள்சூட்டப்படுகின்றன

செப்டம்பர் 14ம் தேதி மதுரை கப்பலூர் அருகே பிரமாண்டமான மாநாட்டை நடத்தவுள்ளார் விஜயகாந்த். இந்தமாநாட்டின்போது தனது அரசியல் பிரவேசத்தையும் முறைப்படி அறிவிக்கிறார்.

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.மாநாட்டுப் பந்தலில் இரண்டு நுழைவாயில்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றுக்கு அண்ணா மற்றும் எம்ஜிஆரின் பெயர்கள்சூட்டப்படவுள்ளன.

இதுதவிர மாநாட்டு மேடையில் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரது படங்கள் இடம் பெறவுள்ளன. இவர்களையேதனது முன்னோடித் தலைவர்களாக விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ், திமுக, அதிமுகவிலிருந்து கணிசமானதொண்டர்களைத் தன் பக்கம் இழுக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மாநாட்டுப் பணிகளை நேரடியாக மதுரையில் தங்கிப் பார்வையிடுவதற்காக வருகிற 9ம் தேதி மதுரை வருகிறார் விஜயகாந்த்.பின்னர் மதுரையில் தங்கியிருந்து மாநாட்டுப் பணிகளை முடுக்கி விடவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+