ஜெயேந்திரர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை
புதுடெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கில் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் மீது குற்றச்சாட்டுக்களைப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஜெயேந்திரர் மீதான சங்கரராமன் கொலை வழக்கில் இன்று செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச் சாட்டுக்கள் பதிவுசெய்யப்படவிருந்தது. இதற்காக குற்றம் சாட்டப்பட்ட 25 பேரும் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிஉத்தரவிட்டிருந்தார்.இந்த நிலையில் இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்திருந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்றுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஜெயேந்திரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயேந்திரர், விஜயேந்திரர்ஆகியோர் சதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டிருப்பதால், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதைப் பரிசீலனை செய்த நீதிபதிகள், இரு சங்கராச்சாரியார்களுக்கும் நேரில் ஆஜராக விலக்கு அளித்தனர். அக்டோபர் 4ம்தேதி வரை சங்கரராமன் கொலை வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யக் கூடாது. அதேசமயம் வழக்கு விசாரணைதொடர்ந்து நடைபெறலாம். 4ம் தேதி நீதிமன்றம் கூடும்போது, ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரும் நேரில் ஆஜராகத்தேவையில்லை என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி அக்பர் அலி, உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய தடை விதித்திருப்பதால் வருகிற 12"ம்தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது. அன்று உச்சநீதிமன்ற உத்தரவு நகலை தாக்கல் செய்ய வேண்டும் என்றுஉத்தரவிட்டார்.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் தவிர மற்ற 23 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.