கர்நாடகத்திற்குள் நுழைந்ததாக தமிழக படகோட்டி கைது
ஓகனேக்கல்:
தர்மபுரி மாவட்டம் ஓகனேக்கல் காவிரி ஆற்றில் தமிழக எல்லையைத் தாண்டி, கர்நாடகத்திற்குள் பரிசல் ஓட்டியதாக கூறிதமிழக படகோட்டியை கர்நாடக போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குள் காவிரி நுழையும், நுழைவாயிலாக ஓகனேக்கல் உள்ளது. இரு மாநில எல்லை நகராகவும்இது உள்ளது. ஓகனேக்கல் அருவியின் வழியாகத்தான் காவிரி ஆறு தமிழகத்திற்குள் நுழைகிறது.இதில் தமிழக எல்லைக்குள் உள்ள அருவியில் பரிசல் ஓட்டுவதற்கான உரிமத்தை கிருஷ்ணமூர்த்தி என்பவர் எடுத்துள்ளார்.அதேபோல, கர்நாடக மாநில அருவிப் பகுதியில் பரிசல் ஓட்டும் உரிமத்தை ஆறுமுகம் என்பவர் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எல்லையைத் தாண்டி வந்து பரிசல் ஓட்டுவதாகபரஸ்பரம் குற்றம் சாட்டினர். இது பெரும் மோதலாக மூளும் நிலை உருவானது.
இதுதொடர்பாக கர்நாடக போலீஸார் சிலர் தமிழக பகுதியில் உள்ள மாமரத்துக்கடவு பரிசல் துறைக்கு வந்தனர். அங்குள்ளபரிசல் ஓட்டிகளைப் பார்த்து, இனிமேல் கர்நாடகப் பகுதிக்குள் பரிசல்களை ஓட்டி வரக் கூடாது என்று எச்சரித்துச் சென்றனர்.
இந்தச் சூழ்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் கர்நாடக போலீஸார் அங்கு வந்தனர். அவர்களுடன்வனத்துறையினரும் வந்தனர். இவர்கள் சுப்ரமணியம் என்ற படகோட்டியை, கர்நாடக பகுதிக்குள் வந்து பரிசல் ஓட்டியதாக கூறிகைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து பரிசல் ஓட்ட உரிமம் பெற்றுள்ள கிருஷ்ணமூர்த்தி, கர்நாடக போலீஸாரின் நடவடிக்கை குறித்து ஓகனேக்கல்போலீஸில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் ஆறுமுகம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications