அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு தாத சாஹேப் பால்கே விருது

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி:

மலையாள திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு தாத சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரபல மலையாளப் பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். 1972ம் ஆண்டு வெளியான சுயம்வரம் என்ற படத்தின் மூலம்தனது இயக்குநர் வாழ்க்கையைத் துவக்கியவர். எதார்த்தமான கதைகளை படமாக்கி பெரும் வெற்றி பெற்றவர் அடூர்.

இவரது படங்களில் முக்கியமானவை எலி பத்தாயம், முகமுகம், அனந்தரம், மதிலுகள், விதேயன், கதாபுருஷன் ஆகியவை.கடைசியாக இயக்கிய படம் நிழல் கூத்து. இவர் இயக்கியுள்ள அனைத்துப் படங்களுமே ஏதாவது ஒரு விருதைப் பெற்று சாதனைபடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நான்கு முறை தேசிய விருதுகளும், கேரள மாநில விருதுகளை பலமுறையும், சர்வதேச அளவில் ஒருமுறையும் பெற்றுள்ளார் அடூர்.கடந்த 1984ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.

இந்தியத் திரையுலகின் ஜாம்பவான்களாக திகழ்ந்த சத்யஜித் ரே, ஷியாம் பெனகல் வரிசையில் அடூர் கோபாலகிருஷ்ணனும்பேசப்படுகிறார்.

இந்த ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது பெற அடூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெறும் தேசியதிரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின்போது பால்கே விருது அடூருக்கு வழங்கப்படும்.

கடந்த 1969ம் ஆண்டு முதல் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த 2 பேருக்கு மட்டுமேஇதுவரை இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கன்னட நடிகர் ராஜ்குமார் ஆகியோரேஅவர்கள். தென்னிந்தியாவுக்கு இந்த விருது 3வது முறையாக வந்துள்ளது. மற்ற ஆண்டுகளில் எல்லாம் இந்தி மற்றும் வங்கமொழிகளைச் சேர்ந்தவர்களே இந்த விருதுகளைப் பெற்று வந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+