திமுக மகளிர் பேரணிக்கு அனுமதி மறுப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக சார்பில் வருகிற 15ம் தேதி நடத்தப்படவுள்ள மகளிர் பேரணியை, அண்ணா சாலையில் நடத்த காவல்துறை அனுமதிமறுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர்களுடன் கருணாநிதி திங்கள்கிழமை மாலை ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின்போதுவேலூர் மண்டல மாநாட்டில் அறிவித்தபடி, வருகிற 15ம் தேதியன்று சென்னையில் மகளிர் பேரணியை மிகப் பிரமாண்டமாகநடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், மகளிர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி சென்னைஅண்ணா சாலையில், மகளிர் பேரணி நடத்த அனுமதி கோரி காவல்துஐறையிடம் கடிதம் கொடுத்தோம். அகலமான அண்ணாசாலையில் ஒரு ஓரமாக பேரணி நடத்திக் கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தோம்.

ஆனால் காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்து விட்டது. மாறாக மன்ரோ சிலையிலிருந்து சேப்பாக்கம் அரசினர் விருந்தினர்மாளிகை வரை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.

அன்றைய தினம் காலை பேரணியும், மாலையில் பொதுக் கூட்டமும் நடைபெறும். இரண்டிலும் பெரும் திரளான பெண்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என்றார் கருணாநிதி.

முக்கியச் சாலைகளில் பேரணிகள் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+