காவிரியில் வெள்ளப் பெருக்கு: 1000 பேர் பாதிப்பு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான குடிசைக்குள்தண்ணீர் புகுந்தது. ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. அணைக்கு தற்போது கணிசமான நீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக உபரி நீர்அனைத்தும் அப்படியே வெளியேற்றப்பட்டுக் காண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 36,000 கன அடி உபரி நீர்வெளியேறிக் கொண்டிருக்கிறது.இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெருவதால் காவிரியில் ஏற்பட்டுள்ளவெள்ளப் பெருக்கால் தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட சில காவிரிக் கரையோர மாவட்டங்களில் குடிசைப் பகுதிகளுக்குள் தண்ணீர்புகுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில்கரையைத் தாண்டி தண்ணீர் ஓடுகிறது. இதனால் பள்ளிப்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடிசைகளுக்குள் தண்ணீர்புகுந்தது.
குடிசைகளில் வசித்து வந்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 5000 குடிசைகள்வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து கர்நாடக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும்அதிகரிக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications