பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு!
Subscribe to Oneindia Tamil
புதுடெல்லி:
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறைஅமைச்சர் மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக உயர்ந்து விட்டதால் பெடரோல், டீசல் விலையையும் கணிசமாகஉயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியேவந்த அமைச்சர் மணிசங்கர அய்யர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை ரூ. 3ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2ம் உயர்த்தப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வுஅமலுக்கு வருகிறது.
இருப்பினும் சமையல் எரிவாயு, மண்ணெண்ணை ஆகியவற்றின் விலை உயர்த்தப்படவில்லை என்றார் அய்யர். காங்கிரஸ்கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவது இது 5வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications