அதிமுக கூட்டணிக்குப் பாமக தாவும்: இல.கணேசன்
புதுடெல்லி:
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன், பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி சேர அதிக வாய்ப்புகள் உள்ளதாகபாஜக தேசியச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருகிற சட்டசபைத் தேர்தலில் நாங்கள் தனியாகத்தான் போட்டியிடுவோம்.எங்களது சொந்த பலத்தை நிரூபிப்போம். அதற்காக நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக கூற முடியாது.திமுக கூட்டணியைப் பிளக்க முயற்சிகள் நடக்கிறது. இதில் மதிமுக மட்டும் தப்பியுள்ளது. மற்ற கட்சிகள் எல்லாம் சலசலப்பைகாண ஆரம்பித்துள்ளன. குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை மீது அதிக சந்தேகம் எழஆரம்பித்துள்ளது.
பாமகவைப் பொருத்தவரை வெற்றி பெறக் கூடிய கட்சியுடன் மட்டுமே அது கூட்டணி அமைக்கும். கடந்த தேர்தலில் அக்கட்சிஅதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்டு 20 தொகுதிகளைப் பிடித்தது. பின்னர் கூட்டணியை விட்டு வெளியேறியது.
இந்த முறையும் அது அதிமுக கூட்டணிக்குத் தாவும் என்பதில் சந்தேகம் இல்லை. ராமதாஸ் போன்ற பாமக தலைவர்கள்ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்திருந்தாலும் அவற்றை மறந்து அதிமுகவுடன் சேர பாமக தயங்காது. அதே போலத்தான்கம்யூனிஸ்ட் கட்சிகளும். இவை இரண்டும் திமுக மீது அதிருப்தியாக உள்ளன.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மட்டுமே இப்போதைக்கு கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்யாதவர். பொடாசட்டத்தின் கீழ் கைது தெசய்யப்பட்டதை அவர் இன்னும் மறக்கவில்லை. என மதிமுக பிரியாது என்றே தெரிகிறது.
தேர்தல் எப்போது வந்தாலும் அதை சமாளிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications