சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் நடக்கவில்லை: ஸ்டாலின்
மயிலாடுதுறை:
சென்னை நகரில் 9 சிறு மேம்பாலங்கள் கட்டியதில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று திமுக துணைப் பொதுச் செயலாளர்மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசுகையில், நான் சென்னை மாநகர மேயராகஇருந்தபோது 9 புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டன. சென்னை மாநகர வரலாற்றில் இதுபோன்று பாலங்கள் கட்டப்பட்டதில்லை.திட்ட மதிப்பீட்டை விட மிகக் குறைந்த செலவில் இப்பாலங்களைக் கட்டி முடித்தோம். இதன் மூலம் மாநகராட்சியின் பணம்விரயமாவது தடுக்கப்பட்டு மிச்சப்படுத்தப்பட்டது.ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள், பாலம் கட்டும் பணியில் ஊழல் நடந்துவிட்டதாக கூறி வழக்கு தொடர்ந்து வருகிறார்கள்.
என் மீது தொடரப்பட்ட வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிக்கையை அவர்களால் தாக்கல் செய்ய முடியவில்லை. ஏனென்றால்ஊழல் நடந்திருந்தால்தானே குற்றப்பத்திரிக்கையை அவர்களால் தாக்கல் செய்ய முடியும்.
சட்டசபைத் தேர்தலை எப்போது நடத்தினாலும், அதாவது உரிய தேதியான 2006 மே மாதம் நடத்தினாலும், முன்கூட்டியேநடத்தினாலும் அதை சமாளிக்கும் திறமை, பலம் எங்களுக்கு உள்ளது என்றார் ஸ்டாலின்.