For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விநாயகர் சிலை கரைப்பு: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை தவிர பிற மாவட்டங்களில் எங்கெல்லாம் விநாயகர் சிலைகள் கரைக்கப்படவுள்ளன என்ற பட்டியலை வருகிறசனிக்கிழமைக்குள் தெரிவிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் பொது நலன் மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளார். அதில், பிளாஸ்டர் ஆப் பாரீஸ் வேதிப் பொருளால் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை நீர்நிலைகளில் கரைத்தால் தண்ணீர் மாசுபடும். எனவே அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், தணிக்காச்சலம் ஆகியோர், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் எங்குசிலைகள் கரைக்கப்படவுள்ளன என்பதை தெரிவிக்குமாறு தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்குஉத்தரவிட்டிருந்தார்.

இந்த மனு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவையில் 3இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நீர் நிலைகள் குடிநீருக்காகபயன்படுத்தப்படுவதில்லை. மற்ற இடங்களில் எங்கு கரைக்கப்படவுள்ளன என்பதை வருகிற சனிக்கிழமைக்குள் தெரிவிப்பதாககூறினார்.

இதைத் தொடர்ந்து வருகிற சனிக்கிழமைக்குள் முழு விவரத்தையும் தர வேண்டும். இதுதொடர்பாக பத்திரிக்கைகளில் விளம்பரம்செய்ய வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X