For Daily Alerts
Just In
தலித் தலைவர் இளையபெருமாள் காலமானார்
சிதம்பரம்:
மூத்த தலித் தலைவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான இளையபெருமாள் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்குடியைச் சேர்ந்தவர் இளையபெருமாள். தாழ்த்தப்பட்ட மக்களின்முக்கியத் தலைவராக விளங்கியவர். 3 முறை எம்.பியாக இருந்தவர். ஒரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கடந்த 1980ம் ஆண்டுதமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார்.81 வயதான இளையபெருமாள் சமீப காலமாக உடல் நலம் குன்றியிருந்தார். இதைத் தொடர்ந்து சிதம்பரம் தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு மனைவி, 3 மகன்கள், 3 மகள்கள்உள்ளனர்.
கடந்த 1969ம் ஆண்டு தலித் மக்களின் சமூக, பொருளாதார நிலை குறித்த ஆய்வறிக்கையை இளையபெருமாள் தலைமையிலானகமிட்டி மத்திய அரசிடம் அளித்தது. ஆனால் அந்த பரிந்துரைகளை ஏற்க காங்கிரஸ் அரசு மறுத்து விட்டது. இதையடுத்துகாங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் இளையபெருமாள். பின்னர் கடந்த 2003ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
Comments
Story first published: Thursday, September 8, 2005, 5:30 [IST]