ரசிகர்களின் பாச அலையைத் தடுக்க முடியாது: கார்த்திக்
முதுகுளத்தூர்:
என் மீது ரசிகர்கள் காட்டும் பாச அலையை யாராலும் தடுக்க முடியாது என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த நடிகர் கார்த்திக், சமீப காலமாக தனது சமூக இளைஞர்களை ஒருங்கிணைத்து வருகிறார். சரணாலயம்என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்.அவரைப் போலவே, தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த நடிகர்கள் விவேக், செந்தில் போன்றோரும், தேவர் சமுதாயத்துடன் நெருங்கிவரத் தொடங்கியுள்ளனர். இந்த மூன்று நடிகர்களும் ஏதோ ஒரு எய்முடன் இருப்பதாகவே கூறப்படுகிறது. அதற்கேற்றார்போலதேவர் சமுதாய நிகழ்ச்சிகளில் மூன்று நடிகர்களும் தனித்தனியாகவே, சேர்ந்தோ கலந்து கொள்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூர் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த ஊர்நடிகர் செந்திலின் சொந்த ஊராகும். இங்கு நடந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் கார்த்திக், விவேக், செந்தில் ஆகியோர்கலந்து கொண்டனர். இவர்களைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
கூடியிருந்த கூட்டத்தினரிடையே கார்த்திக் பேசினார். அவர் பேச்சுக்கு ஏராளமான கைத்தட்டல்கள் இருந்தன. கார்த்திக்பேசுகையில், எனது மனதில் ஐக்கியமான மக்கள் நீங்கள். உங்களுக்காக நான் பாடுபடுவேன். என் மீது ரசிகர்கள் மிகுந்த அன்புவைத்துள்ளனர். மதுரையிலும், ராஜபாளையத்திலும் அந்த அன்பு வெள்ளத்தைப் பார்த்துப் பிரமித்துப் போனேன். அவர்களின்பாச அலையை யாராலும் தடுக்க முடியாது.
நாம் வேகமானவர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் நம்மிடம் விவேகமும் உள்ளது. அகடோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்திவருகிறது. அன்றைய தினம் நான் தேவர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தவுள்ளேன். தேவர் குருபூஜையிலும் கலந்துகொள்ளவுள்ளேன் என்றார் கார்த்திக்.
நடிகர் விவேக் பேசுகையில், நண்பர் செந்திலின் அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ளேன். இது ஒரு கோவில் கும்பாபிஷேக விழா.வேறு எந்த எர்த்தமும் இதற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தெய்வமாக வணங்கும் மக்கள் நாம். அப்படிப்பட்ட மக்களாகிய நீங்கள், சண்டை,சச்சரவுகளில் ஈடுபடக் கூடாது. அரிவாளப் போட்டு விட்டு அன்பை கையில் எடுக்க வேண்டும். உங்களது குழந்தைகளுக்குநல்ல படிப்பைக் கொடுங்கள். அதுதான் அவர்களுக்கு நீங்கள் தரும் பெரும் சொத்தாகும் என்றார் விவேக்.