மர்மப் பையுடன் விமானம் ஏறிய 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சோதனை இடப்படாத பையுடன் விமானத்தில் பயணிக்க முயன்ற 2 சிங்கப்பூர் பயணிகளை சென்னை விமான நிலைய மத்திய தொழிலகபாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் 2 பயணிகள் ஏறினர். அவர்கள் இருவரும் தங்களுடன் பைகளைஎடுத்து வந்திருந்தனர். ஆனால் அந்தப் பைகைளை சுங்கத் துறை அதிகாரிகளிடம் கொடுத்து சோதனைக்கு உட்படுத்தவில்லை எனத்தெரிகிறது. மேலும், பாதுகாப்பு சோதனையிலிருந்தும் அந்தப் பையை மறைத்து விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து இருவைரயும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை காவலர்கள் கைது செய்தனர். அந்தப் பைகளை விமான நிலையத்தில்வைத்து அவர்களிடம் கொடுத்த மேலும் 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் யார், எதற்காக பைகளை மறைத்து எடுத்தச் சென்றனர் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications