டோனி பிளேருடன் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

உதய்ப்பூர் (ராஜஸ்தான்):

பிரதமர் மன்மோகன் சிங், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த அவரும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இன்று ராஜஸ்தான்மாநிலம் உதய்ப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இன்றைய பேச்சுவார்த்தையின்போது தீவிரவாதம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும்பேச்சுவார்த்தை நடத்தினர். உலகமயமாக்கல் குறித்தும் முக்கிய விவாதம் இடம் பெற்றது.

முன்னதாக இரு தலைவர்களும் ஒரே விமானத்தில் உதய்ப்பூர் வந்தனர். அவர்களை ராஜஸ்தான் தொழில்துறை அமைச்சர் நர்பத் சிங் ரிஸ்விவரவேற்றார். உதய்ப்பூரில் உள்ள புகழ் பெற்ற விலாஸ் அரண்மனை ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடந்தது.

இன்று மாலை மன்மோகன் சிங்கும், பிளேரும் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். அதன் பின்னர் பிளேர் லண்டன்திரும்புகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+