ரயில் கட்டணத்தை உயர்த்துவோம்: அமைச்சர் வேலு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வையடுத்து ரயில் கட்டணமும் உயர்த்தப்படும் என ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலுதெரிவித்துள்ளார்.
பெங்களூர் ரயில் நிலையத்தில் தானியங்கி ரயில்வே பிளாட்பார டிக்கெட் வழங்கும் இயந்திரத்தை வேலு தொடங்கி வைத்தார். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதுவரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டபோது ரயில் கட்டணமும் உயர்த்தப்பட்டுவந்தது. ஆனால் கடந்த இரண்டு முறை பெட்ரோல் விலை உயர்ந்தபோதிலும், ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
ஆனால் தற்போது அந்த சூழ்நிலை இல்லை. ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே நிச்சயமாக ரயில்கட்டணம் உயர்த்தப்படும் என்றார் வேலு.












Click it and Unblock the Notifications