நான் போகலாம், எனது படைப்பு இருக்கும்: வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

கோயம்பத்தூர்:

நான் நாளைேய மடிந்து போகலாம், ஆனால் எனது படைப்புக்கு எப்போதுமே மரணம் இல்லை என்று கவிஞர் வைரமுத்துகூறியுள்ளார்.

Vairamuthu

கோவையில் நடந்த டி.கே.சி. 125வது பிறந்த நாள் உள்ளிட்ட இரு பெரும் விழாவில் கலந்து கொண்டு வைரமுத்து பேசினார்.அவர் பேசுகையில், டி.கே.சி தமிழ்க் கலாச்சாரத்தின் சின்னம். தன்னை நேசித்தவர் அவர். ஒரு மனிதன் எப்போதுமே முதலில்தன்னை நேசிக்க வேண்டும். அப்போதுதான் அவன் அடுத்தவனை நேசிக்க முடியும்.

புரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். சரியான புரிதல் இல்லை என்றால் அது சிக்கலாகி விடும். டி.கே.சியையும் கூட தமிழகம்சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

உலகத்தில் துன்பம்தான் அதிகம். எங்கு பார்த்தாலும், ஏதாவது ரூபத்தில் துன்பம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு மத்தியில்தான்மனிதன் வாழ வேண்டியுள்ளது. ஆனால் கெட்டதிலும் நன்மை இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

யாருமே நல்லவர்கள் இல்லை, யாருமே கெட்டவர்களும் இல்லை. நல்லவனிடம் துர்குணங்கள் இருக்கலாம், கெட்டவன்ஒருவனிடம் ஏதாவது நற்குணம் இருக்கலாம்.

நாளையே நான் மடிந்து போகலாம், ஆனால் எனது படைப்புகள் அப்படியேதான் இருக்கும். அவற்றிற்கு மரணம் கிடையாது.எனது படைப்பு எனது உயிரை விட உயர்ந்தது. அதை யாராலும் கிழித்துப் போட்டு விட முடியாது என்றார் வைரமுத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+