தனுஷ் தாயார் மீதான செக் மோசடி வழக்கு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் தனுஷின் தாயார் விஜயலட்சுமி கஸ்தூரிராஜா மீது தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

நடிகர் தனுஷின் தாயார் விஜயலட்சுமி கஸ்தூரிராஜா. இவர் பல படங்களைத் தயாரித்துள்ளார். விஜயலட்சுமி மீது சென்னையைச்சேர்ந்த சிவக்குமார் என்பவர் சென்னை 2வது அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், கடந்த 2002ம் ஆண்டு காதல் ஜோதி என்ற படத்தைத் தயாரிப்பதற்காக விஜயலட்சுமி என்னிடம் ரூ. 10 லட்சம் பணத்தைக்கடனாக பெற்றார். இதைத் திருப்பிச் செலுத்துவதற்காக படத்தின் வெளியீட்டு உரிமை, ரூ. 5 லட்சம் என இருணிறை ரூ. 10லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

அவர் கொடுத்த இரண்டு காசோலைகளையும் வங்கியில் போட்டபோது, வங்கிக் கணக்கில் பணம் இல்லாத காரணத்தால் திரும்பிவந்து விட்டன. இதையடுத்து அவரை அணுகியபோது அவர் சரியாக பதில் சொல்லவில்லை. எனவே விஜயலட்சமி மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி காயத்ரி ணின்னிலையில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின்போது, விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர்கள்வாதிடுகையில், சிவக்குமாருக்குக் கொடுக்கப்பட்ட படத்தின் உரிமையை அவர் வேறு ஒரு நிறுவனத்திற்கு மாற்றி எழுதிக்கொடுத்துள்ளார். இது சட்டவிரோதமானது.

எனவே இந்த வழக்கு விசாரணைக்கே தகுதியற்றது. இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டனர். இதை ஏற்ற நீதிபதிகாயத்ரி, சிவக்குமாரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+