விபத்தில் சிக்கியது குர்லா எக்ஸ்பிரஸ்; பயணிகள் தப்பினர்
ஓமலூர்:
குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது. இதனால் 2500க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
மும்பையிலிருந்து கோவை வரை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் அருகே வந்து கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமைஅதிகாலை 3.30 மணியளவில் ஓமலூர் அருகே சரபங்கா ஆற்றுப் பாலத்தின் மீது ரயில் வந்தபோது திடீரென பெரும் சப்தம்கேட்டது.இதையடுத்து ரயிலை ஓட்டுநர் அவசர கால பிரேக்கைப் பயன்படுத்தி நிறுத்தினார். உடனடியாக ஓமலூர் ரயில் நிலையத்திற்குத்தகவல் சென்றது. அங்கிருந்து கோட்ட பொறியாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பொறியாளர்கள், தீயணைப்புப் படையினர்,ரயில்வே பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்தனர்.
சப்தம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து ஆராய்ந்தபோது, முதலாவது வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்குக் கீழேநீளமான இரும்புத் தகடு தண்டவாள சக்கரங்களில் சிக்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதன் காரணமாகவே ரயில்சென்றபோது பெரும் சப்தம் ஏற்பட்டுள்ளது.
கேஸ் வெல்டிங் மூலம் இரும்புத் தகடு அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து காலை 6.45 மணிக்கப் பிறகு ரயில் அங்கிருந்துகிளம்பிச் சென்றது. ஆற்றுப் பாலத்தில் ரயில் தடம்புரண்டு ஆற்றில் விழுந்திருந்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும். அந்தரயிலில் 2500க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது திட்டமிட்ட சதியா அல்லது தண்டவாள இரும்புத் தகடு, ரயில் பெட்டிக்குக் கீழே சிக்கிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்தாஎன்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications