சினிமா பாடலாசிரியர்களை கைது செய்யக் கோரி வழக்கு
சென்னை:
பாலுணர்வைத் தூண்டும் வகையில் பாட்டு எழுதும் திரைப்பட பாடலாசிரியர்கள் மீது வழக்குத் தொடர காவல்துறைக்குஉத்தரவிடுமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொழிலாளர் குடியரசு ணின்னணி என்ற அமைப்பின் தலைவர் ரகு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளமனுவில், பெண்களுக்கு எதிரான கலாச்சார சீரழிவைத் தடுப்பதற்காக குரல் கொடுத்து வருகிறது எங்கள் அமைப்பு.தமிழ் திரைப்பட பாடலாசிரியர்கள் பெண்களைப் பற்றி ஆபாசமாக பாட்டுக்கள் எழுதுவது, வர்ணிப்பது அதிகரித்து வருகிறது.இந்தப் பாடல்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாலுர்ணவைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.
பெண்களை கேலி செய்தால், கிண்டல் செய்தால், ஈவ் டீசிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் நடவடிக்கை எடுக்கிறார்கள்.ஆனால் அப்படிச் செய்தவர்கள் பாடும் பாடல்களை எழுதிய திரைப்பட பாடலாசிரியர்கள் மீது போலீஸார் நடவடிக்கைஎடுப்பதில்லை.
கவிஞர் வைரமுத்து எழுதிய சிரிச்சு சிரிச்சு வந்தா சீனாதானோ டோய், சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா, மல மலமருதமல, கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா போன்ற பாடல்கள் பெண்களை அவமதிப்பது போல உள்ளது.
இந்தப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர்கள் மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால்போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். எனவே இப்புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பாடலாசிரியர்கள் மீதுநடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ரகு.