For Daily Alerts
Just In
காவல் நிலையத்தில் ஏட்டு அடித்துக் கொலை
கோயம்பத்தூர்:
கோவை காவல் நிலையத்தில் விசாரணைக் கைதியால் தலைமைக் காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கோவை காந்திபுரம் காவல் நிலையத்தில் திருட்டு விசிடி ஒழிப்புப் பிரிவில் தலைமைக் காவலராக இருந்தவர் காளிமுத்து. சனிக்கிழமைஅதிகாலை திருட்டு விசிடி பதுக்கி வைத்திருந்ததாக சண்முகம் என்பவரை காளிமுத்துவும், சப் இன்ஸ்பெக்டரும் பிடித்து காவல் நிலையம்கொண்டு வந்தனர்.சண்முகத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு சப் இன்ஸ்பெக்டர் தனது வீட்டுக்குச் சென்று விட்டார். தலைமைக் காவலர் காளிமுத்துமட்டும் காவல் நிலையத்தில் இருந்தார். காலை 10 மணியளவில் சப் இன்ஸ்பெக்டர் காவல் நிலையம் வந்தபோது, காளிமுத்து பிணமாகக்கிடந்தார்.
அவரை அடித்துக் கொன்றதற்கான தடயங்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து விசாரணைக் கைதி சண்முகம் மீது, காளிமுத்துவை அடித்துக்கொன்றதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த வழக்கின் கீழ் சண்முகத்தைக் கைது செய்துள்ளனர்.
காவல் நிலையத்திலேயே தலைமைக் காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்டது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Story first published: Saturday, September 10, 2005, 5:30 [IST]