சென்னையில் நதிகள் இணைப்பு மாநாடு: வாஜ்பாய், அத்வானி பங்கேற்பு
நாமக்கல்:
கங்கை, காவிரி நதிகளை இணைப்பது தொடர்பாக பாஜக சார்பில் வருகிற 17ம் தேதி சென்னையில் மாநாடு நடைபெறுகிறது.இதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக தலைவர் அத்வானி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,வருகிற 15, 16 , 17 ஆகிய தேதிகளில் சென்னையில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் வாஜ்பாய்,அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
17ம் தேதி சென்னையில் கங்கை, காவிரி இணைப்பு தொடர்பான மாநாடு நடைபெறுகிறது. இதிலும், வாஜ்பாய், அத்வானிபங்கேற்கிறார்கள். தீவுத் திடலில் இந்த மாநாடு நடைபெறும்.
சேது சமுத்திரத் திட்டம் தமிழர்களின் நீண்ட நாள் கனவாகும். ஆனால் சுற்றுச்சூழலுக்கும், மீனவர்களின் நலனுக்கும்பாதகமில்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
ஏழை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவற்றில் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவை விட குறைவாகவே உள்ளது.உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதாக மத்திய அரசுகூறுகிறது. ஆனால் நம்மை விட ஏழை நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை எப்படி குறைவாக உள்ளது என்பதைமத்திய அரசுவிளக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications