தேய்ந்து வரும் தமிழ்! காளிமுத்து வருத்தம்
மதுரை:
தமிழகத்தில் தமிழ் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது என்று சபாநாயகர் காளிமுத்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
மதுரை தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ்க் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழா மதுரையில் நடந்தது.இதில் காளிமுத்து கலந்து கொண்டு பேசினார்.காளிமுத்து பேசுகையில், சங்கம் வைத்துத் தமிழ் மொழியை வளர்த்த பெருமைக்குரியது மதுரை. நான்காம் கடை வள்ளல் என்றுபோற்றப்படும் பாண்டித் தேவர், நான்காவது தமிழ்ச் சங்கத்தை வைத்து தமிழை வளர்த்தார். அவருக்கு உரிய இடத்தில், உரியநேரத்தில் சிலை வைக்கப்படும்.
தமிழகத்தில் தமிழைப் பயன்படுத்துவோர் குற்ைநது வருகின்றனர். பிற மொழி மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. எங்குமேதமிழ் இல்லை என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. ரயில் நிலையங்களில் ஆங்கிலமும், இந்தியும்தான் தலை தூக்கி நிற்கின்றன.விமான நிலையங்களிலும் இதே கதிதான்.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல வெளிநாட்டு விமான நிலையங்களில் அழகு தமிழில் அறிவிப்பு செய்கின்றனர்.இந்த நிலை மாற வேண்டும். தமிழ் மீது தமிழர்களுக்கு பிடிப்பு வர வேண்டும். தாய் மொழியை மதிக்காதது, தாயையே மதிக்காததுபோலாகும்.
எனது தாயை மதிப்பது போல இன்னொரு தாயையும் நான் மதிக்கிறேன். அவர் முதல்வர் ஜெயலலிதா. இன்னொரு முதல்வரையும்எனக்குப் பிடிக்கும், அவர் செந்தமிழ்க் கல்லூரியின் முதல்வர் என்றார் காளிமுத்து.