For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்ணசாமியுடன் இணையும் பாமக எம்.எல்.ஏ.

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ வேல்முருகன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கீழ்செயல்படப் போவதாக அறிவித்துள்ளார்.

பாமக சார்பில் வந்தவாசி தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வேல்முருகன். தேவேந்திர குல வேளாளர் பேரைவஎன்ற பெயரில் தலித் அமைப்பின் தலைவராகவும் அவர் இருக்கிறார். பாமகவில் தலித்துகள் மிகவும் கேவலமாகநடத்தப்படுவதாக கூறி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, கட்சித் தலைவர் ஜி.கே.மணி ஆகியோரைகடுமையாக முன்பு விமர்சித்தவர் வேல்முருகன்.

அன்று முதல் தனித்து செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்தில் சேர்ந்து செயல்படவேல்முருகன் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது சங்கம், பசுபதிபாண்டியன் தலைமையில் இயங்கும் தேவேந்ேதிர குல வேளாளர் சங்கம் ஆகியவை டாக்டர் கிருஷ்ணசாமியின் கீழ் செயல்படமுடிவு செய்யப்பட்டுள்ளது.

வெறும் ஓட்டு வங்கிக்காகவே பாமக என்னைப் பயன்படுத்திக் கொண்டது. சுமை தூக்கும் குதிரைகளாகவே இதுவரை நாங்கள்பயன்படுத்தப்பட்டு வந்தோம். சட்டசபைத் தேர்தலுக்கு மட்டுமே கருணாநிதி சீட் தந்தார். ஆனால் நாடாளுமன்றத்திற்குள்தலித்துகளை அனுப்ப அவருக்கு மனம் வரவில்லை.

எங்களை ஜாதி ரீதியாக பார்க்கும் அவர், தீண்டத்தகாத இனமாகவே எங்களை கருதுகிறார். ஆனால் ஜாதி ரீதியாக மட்டுமேஇயங்கும் பாமக குறித்து அவர் ஒரு வார்த்தை கூட கூறுவதில்லை.

எங்களது சங்கத்தின் அரசியல் மாநாடு மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் திருமாவளவன் கலந்துகாள்ளவில்லை. அவரை அழைப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் அவர் ராமதாஸை விட்டு வெளியே வர வேண்டும்.தலித் மக்களின் ஓட்டுக்களை சுரண்டுவதற்காகத்தான் அவர் திருமாவளவனை தன்னுடேயே வைத்துக் கொண்டுள்ளார். அதைஅவர் உணர வேண்டும் என்றார் வேல்முருகன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X