விஜயகாந்த், கார்த்திக் மீது ஸ்டாலின் திடீர் பாய்ச்சல்
செஞ்சி:
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஜாதி, சமுதாய அடிப்படையில் சிலர் கட்சிகளைத் தொடங்குவது கண்டனத்துக்குரியதுஎன்று நடிகர்கள் விஜயகாந்த், கார்த்திக் ஆகியோரை திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாகசாடியுள்ளார்.
நடிகர் விஜயகாந்த்தின் அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக தரப்பில் ஸ்டாலின் களம் இறங்கியுள்ளார். விஜயகாந்த் புதியகட்சி தொடங்கப் போவதை அவர் அவ்வப்போது விமர்சித்து வருகிறார்.ஜோசியக்காரர்கள் கூறுவதை நம்பி அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கக் கூடாது என்று சமீபத்தில் கூறினார். இப்போது ஜாதி,சமுதாயத்தை நம்பி விஜயகாந்த் அரசியலுக்கு வருவதாக மறைமுகமாக சாடியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியில் அவர் திமுக ஊழியர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், தேர்தல் நெருங்கிவரும் வேளையில் சிலர் திடீர் திடீரென கட்சிகளை ஆரம்பிக்கிறார்கள்.
ஜாதிப் பெயரையும், சமுதாயத்தின் பெயரையும் சொல்லிக் கொண்டு இவர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள். ஏதேனும் ஆதாயம்கிடைக்குமா என்ற நப்பாசையில் இவர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள்.
இன்னும் சிலர் ஜோசியக்காரர்கள் சொல்லியதை நம்பி கட்சி ஆரம்பிக்கிறார்கள். இது கண்டனத்துக்குரியது. அடுத்த முதல்வர்நாம்தான் என்று அவர்கள் நம்புவதுதான் இதில் பெரிய வேடிக்கை என்று நக்கலடித்துள்ளார் ஸ்டாலின்.
ஸ்டாலின் குத்தல் பேச்சு நடிகர் கார்த்திக்கையும் குறி வைத்தே பேசப்பட்டதாக கூறப்படுகிறது.