வீராணம் ஏரி மாசுபடவில்லை: சென்னை குடிநீர் வாரியம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீராணம் ஏரி நீர் மாசுபடவில்லை என்று சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியில், சமீபத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. நொய்யல் ஆற்றின் மூலம்ஒரத்துப்பாளையம் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட சாயக் கழிவு நீர் வீராணம் ஏரியில் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இதனால்ஏற்பட்டது.இதையடுத்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வீராணம் நீரை சோதனைக்கு உட்படுத்தியது. இந்த நிலையில், வீராணம் ஏரி நீர்மாசுபடவில்லை என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வாரியத்தின் சார்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், வீராணம் ஏரி நீரை தினசரி 4 முறை தரப்பரிசோதனை செய்து வருகிறோம். அதன் பின்னரே சென்னைக்கு அந்த நீர் அனுப்பப்படுகிறது. இதுவரை வீராணம் ஏரி நீரின் தரத்தில்எந்தவித மாறுதலும் தெரியவில்லை. எனவே வீராணம் ஏரி நீர் மாசுபட்டு விட்டதாக வரும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்,பயமும் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications