சிக்கினார் ஐடியலின் இன்னொரு கூட்டாளி!
திண்டுக்கல்:
மோசடி மன்னன் ஐடியல் சுப்ரமணியத்தின் இன்னொரு முக்கிய கூட்டாளியான கிருஷ்ணன் நாயர் என்பவரை போலீஸார்திண்டுக்கல்லில் கைது செய்துள்ளனர்.
பல பேரிடம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறி கமிஷன் தொகையாக மட்டும் சில கோடி ரூபாய்களை மோசடி செய்ததாகஐடியல் சுப்ரமணியத்தை போலீஸார் கைது செய்துள்ளனர். அருடைய கூட்டாளிகள் முகி, செளந்தர், மணிகண்டன் ஆகியோரும்கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் கிருஷ்ணன் நாயர் என்ற இன்னொரு கூட்டாளியும் இப்போது சிக்கியுள்ளார். கிருஷ்ணன் நாயர் கேரளாவைச்சேர்ந்தவர். ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பே திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி கிராமத்தில் வந்து குடியேறினார். அப்போதுஐடியலின் நட்பு கிடைத்துள்ளது.
அதன் பின்னர் பழனியைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரை, ஐடியலுக்கு கிருஷ்ணன் நாயர் அறிமுகப்படுத்தி வைத்தார். இதற்காககமிஷனாக கணிசமான தொகையையும் ஜெயகாந்தனிடமிருந்து பெற்றுள்ளார் கிருஷ்ணன் நாயர்.
கடன் தொகையை ஜெயகாந்தன் பலமுறை கேட்டும் நாயர் இழுத்தடித்துள்ளார். தொடர்ந்து ஜெயகாந்தன் பணத்தைக் கேட்டுவற்புறுத்தவே, ஐடியலும், கிருஷ்ணன் நாயரும் சேர்ந்து ஜெயகாந்தனை மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில்தான் ஐடியல் போலீஸில் சிக்கிக் கொண்டார். இதை அறிந்த ஜெயகாந்தன் தற்போது திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் கிருஷ்ணன் நாயரை தேடி வந்தனர்.தலைமறைவாக இருந்து வந்த கிருஷ்ணன் நாயர் செம்பட்டியில் வைத்து போலீஸாரிடம் சிக்கினார். அவர் தற்போது மதுரைசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications