தேர்தலுக்கு ரெடி! ராஜ.கண்ணப்பன் அறிவிப்பு!
சென்னை:
சட்டசபைத் தேர்தலை சந்திக்க மக்கள் தமிழ் தேசம் தயாராக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ராஜ. கண்ணப்பன் கூறியுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது உருவான கட்சி மக்கள் தமிழ் தேசம். ஜாதிக் கட்சியான மக்கள் தமிழ் தேசம், கடந்த தேர்தலில்திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஒரு சீட் மட்டுமே இக்கட்சிக்கு திமுக கொடுத்து. அந்த இடத்திலும் ராஜகண்ணப்பனே போட்டியிட்டார், தோல்வியைத் தழுவினார்.தற்போதும் திமுக கூட்டணியில் இருக்கும் ராஜ கண்ணப்பன், சமீப காலமாக விஜயகாந்த் குறித்துப் பேட்டியளித்து வருகிறார்.விஜயகாந்த்தால் தங்களது கூட்டணிக்குப் பாதிப்பு ஏற்படாது என்று தொடர்ந்து அவர் கூறி வருகிறார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதுவரை 25 மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்திமுடித்து விட்டோம். கடைசிக் கட்டமாக 5 மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
செயல்வீரர்கள் கூட்டத்திற்குப் பினஅனர் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் மாவட்ட மாநாடு நவம்பர் மாதம் நடைபெறும்.சட்டசபைத் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
எங்களது ஓட்டு வங்கி அப்படியே சிந்தாமல், சிதறாமல் உள்ளது. இதை ஓட்டுக்களாக மாற்றுவது குறித்து செயல்வீரர்கள் மற்றும்மாவட்ட கூட்டங்களில் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எடுத்துரைக்கிறோம்.
விஜயகாந்த் புதுக் கட்சி தொடங்குவதால் எங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. கட்சி தொடங்குவது அவரது விருப்பம்.அதையாரும் தடுக்க முடியாது. ஏற்கனவே தற்போதுள்ள கட்சிகளிடம் 85 சதவீத வாக்காளர்கள் உள்ளனர். எனவே புதிதாக கட்சிதொடங்குபவர்களால், ஏற்கனவே இருப்பவர்களுக்கு ஒரு நஷ்டமும் வராது. திமுக கூட்டணியின் ஓட்டுக்கள் அப்படியே உள்ளனஎன்றார் ராஜ கண்ணப்பன்.












Click it and Unblock the Notifications